வகுப்பு: பத்தாம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல் -வரலாறு
பாடத்தலைப்பு: இரு உலகப்போர்களுக்கிடையில் உலகம்
கற்றல் முறை: SQ4R ( Survey, Question, Read, Reflect, Recite, and Review)
கற்றல் கருவிகள்(TLM): Power Point, QR videos, கற்றல் நோக்கங்கள்:
- முதல் உலகப்போருக்குப் பிந்தைய நிகழ்வுகளை பொருளாதார பெருமந்தத்திற்கு இட்டுச்சென்றதை சுட்டிக்காட்டுதல்
- முதல் உலகப்போரில் தோல்வியடைந்த நாடுகள் மீது வெர்செயல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகள் ஜெர்மனியில் நாசிசம்,இத்தாலியில் பாசிசமும் உருவாக காரணமாக இருந்ததை எடுத்து கூறுதல்
- காலனிகளாக்கப்பட்ட நாடுகளில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்களும், காலனிய நீக்க செயல்பாடுகளையும் அறிதல்.
- தென்கிழக்காசியாவில் இந்தோ-பிரான்சும், தெற்காசியாவில் இந்தியாவையும் காலனியாதிக்கதிற்கு எடுத்துக் கொண்டு விளக்குதல்
- ஆப்பிரிக்க ஐரோப்பிய காலனியக்காலனிகள் உருவானதை விளக்குதல்.அவ்வகையில் தென்னாப்பிரிக்கவின் ஆங்கில காலனியாதிக்கத்தை விளக்குதல்
- தென் அமெரிக்காவில் விடுதலைப்போராட்டங்களும், அரசியல் வளர்ச்சியையும் புரிந்து கொள்ளுதல்
கற்றல் விளைவுகள்:
- SST10012- ஐரோப்பிய தேசியவாதத்தை காலனித்துவ எதிர்ப்பு தேசியவாத்துடன் ஒப்பிடுதல், உதாரணமாக இந்தியா, தென் அமெரிக்கா, கென்யா, இந்தோ-சீனா போன்ற நாடுகள்
- SST10032 - ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் தேசியவாத சின்னங்கள் எவ்வாறு ஐரோப்பிய சின்னங்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதை நூல்கள் மற்றும் காட்சிகள் மூலம் பகுப்பாய்வு செய்தல்
ஆயத்தப்படுத்துதல்
முதல் உலகப்போர் மனிதகுல வரலாற்றில் பேரழிவையும், பொருளாதார இழப்பையையும் இட்டுசென்றதை சென்ற பாடத்தில் படித்திருப்பீர். முதல் உலகப்போரில் தோல்வியுற்ற நாடுகள் பழிவாங்கும் கொள்கையை ஆதரிக்கவும், காலனியாதிக்க நாடுகள் அடிமைத்தனத்தை எதிர்க்கும் நிலையும் எவ்வாறு உருவாகின என்பதை இப்பாடத்தில் விரிவாக காணலாம்
கருத்து வரைபடம்
மதிப்பீடு:
கேள்வி பதில்களை காண இங்கே சொடுக்கவும் - Click Here
No comments:
Post a Comment